Wednesday, 6 August 2025

 

என்னைப்போல் ஒருத்தி

வனத்தின் யட்சியென
மனங்கொண்டிருப்பவள்

மாலைக்கதிர்
மயங்கிச்சரியும்

கவனிப்பார் எவருமற்ற
தாமரைக்குளத்தில்
உவந்து
தன் பாதம் நனைக்க
காலாதீதமாய்
கருவறையில்
உறைந்திருக்கும்
மீனாட்சியும்
உள்ளம் குளிர்கிறாள்

தன்னைப்போல்

ஒருத்தியைக்கண்ட

அக்கணத்தில்.

**

No comments: