என்னைப்போல் ஒருத்தி
வனத்தின் யட்சியென
மனங்கொண்டிருப்பவள்
மாலைக்கதிர்
மயங்கிச்சரியும்
கவனிப்பார் எவருமற்ற
தாமரைக்குளத்தில்
உவந்து
தன் பாதம் நனைக்க
காலாதீதமாய்
கருவறையில்
உறைந்திருக்கும்
மீனாட்சியும்
உள்ளம் குளிர்கிறாள்
தன்னைப்போல்
ஒருத்தியைக்கண்ட
அக்கணத்தில்.
**
No comments:
Post a Comment