Thursday, 7 August 2025

 

காவியாவும் அர்ச்சனாவும்

 இப்போதும்  

அவர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள்

அவரவர் அறையில்

அவரவர் விருப்பத்தில்

தேர்ந்து டிவி பார்க்கிறார்கள்
அத்தனை ஒழுங்கு அவர்களின் அறை

முன்பு ஒரு சமயம்
"
அவ என்னைக் கிள்ளிவைக்கிறா'
அவ என்னை வம்பு செய்கிறா "
காவியாவும் அர்ச்சனாவும்
சேர்ந்திருக்கும் பொழுதுகள்
இப்படித்தான்

ஒருநாள் இவர்கள் ஒன்றாக இருந்தால்
ஒன்பது நாள் ஒழுங்கு செய்யும்படி
வீடு அப்படிக் கலைந்துக் கிடக்கும்
நிமிடத்திற்கொருமுறை ஓயாத சண்டை
நிமிடத்திற்கொருமுறை சமாதானமும்
நிமிடத்திற்கொருமுறை அணைப்பும்

இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்.

**

"இப்பொழுது வளர்ந்து விட்டாள்" கவிதைத் தொகுப்பிலிருந்து.. 

 

No comments: