Sunday, 3 August 2025




பழமை

கடல் மிகப்புராதனமானது

அது

இரகசியங்களின்

அற்புதங்களின்

மேலும்

கனவுகளின் பெட்டகம்

 

மலைகளைப்

பெயர்த்தெடுத்துக் கொட்டிவைத்திருக்கும்

பாறைகள்தானா

பெருங்கடலை

அடக்கி விடும்

 

கடலின்  பழமைக்குக்

கடலே சாட்சி

 

ஆழ்கடலின்  ரகசியங்களை

பச்சைப்பாசி  படர்ந்த

பாறையிடுக்கு  நண்டுகள்

கூறிக்கொண்டேயிருக்கின்றன

 

ஈரக்காற்றின்

உப்புச்சுவையோடும்

கடல்  வாசனையோடும்

ஆழ்கடலின்  மௌனத்தைச்

கலைத்துக்  கொண்டிருந்தது

காற்றலைகள்

 

வெளி நனைந்து  சிலிர்க்கையில்

வெளிப்படுவது

பிரபஞ்ச சுவையும்

பழமையின் வாசனையுமே.

%

 "கடலோடு இசைத்தல்" தொகுப்பிலிருந்து.. 

No comments: