Saturday, 16 August 2025

 

சாட்சியம் 

 

காலங்காலமாக
தன்னைத் தழுவிக்கிடக்கும்
கரையிடம்கூட

சொல்லத் தயங்கிய
இரகசியமொன்றை
கொண்டிருந்த கடல்,
தாளாமல் தனக்குள் தளும்பிய கணத்தில்
மேவியெழுந்த  காற்றின் காதுகளில் 
மெல்ல முணுமுணுக்க,
வட்டமிட்டுக் கொண்டிருந்த
வலசைப் பறவைகளோ
அதனை
வானத்திற்கு ஏந்திப்போக,
நீந்தவோ  பறக்கவோ
அறியாது
சாட்சியாக நிற்கும் பெண்ணின்
காட்சி முழுவதும் படர்கிறது

அது.

%

1 comment:

கவிஞர் மணி பாரதி said...

அருமை ஜோதிம்மா!