சாட்சியம்
காலங்காலமாக
தன்னைத்
தழுவிக்கிடக்கும்
கரையிடம்கூட
சொல்லத் தயங்கிய
இரகசியமொன்றை
கொண்டிருந்த கடல்,
தாளாமல் தனக்குள் தளும்பிய கணத்தில்
மேவியெழுந்த காற்றின் காதுகளில்
மெல்ல முணுமுணுக்க,
வட்டமிட்டுக் கொண்டிருந்த
வலசைப் பறவைகளோ
அதனை
வானத்திற்கு ஏந்திப்போக,
நீந்தவோ பறக்கவோ
அறியாது
சாட்சியாக நிற்கும் பெண்ணின்
காட்சி முழுவதும் படர்கிறது
அது.
%
1 comment:
அருமை ஜோதிம்மா!
Post a Comment