சூரிய உதயத்திற்கு முன்பாக
என்னிடமிருந்து சென்றுவிடுவான்
எனது
இரவும் பகலும்
ஒரே நிறத்திலானதாய் மாறிவிட்டது
எனது
இரவையும் பகலையும்
கண்டுணரச் செய்ய
அவனது விழிகளைத் தந்திருக்கிறான்
அந்த விழிகளைக்கொண்டு
கடந்து வந்திருக்கிறேன்
இரவுகளை
அவன்
என்னிலிருந்து நீங்கிச் செல்லும்
ஒவ்வொரு விடியலும்
துயரம் மிக்கதாகவே புலர்கிறது
இரவுக்கும் பகலுக்கும்
இருவேறு நிறங்களுண்டு என
என் பொழுதுகளை வர்ணித்தவன்
வண்ணமற்ற மலர்களை
தந்துவிட்டுச் சென்றிருக்கிறான் .
என்னிடமிருந்து சென்றுவிடுவான்
எனது
இரவும் பகலும்
ஒரே நிறத்திலானதாய் மாறிவிட்டது
எனது
இரவையும் பகலையும்
கண்டுணரச் செய்ய
அவனது விழிகளைத் தந்திருக்கிறான்
அந்த விழிகளைக்கொண்டு
கடந்து வந்திருக்கிறேன்
இரவுகளை
அவன்
என்னிலிருந்து நீங்கிச் செல்லும்
ஒவ்வொரு விடியலும்
துயரம் மிக்கதாகவே புலர்கிறது
இரவுக்கும் பகலுக்கும்
இருவேறு நிறங்களுண்டு என
என் பொழுதுகளை வர்ணித்தவன்
வண்ணமற்ற மலர்களை
தந்துவிட்டுச் சென்றிருக்கிறான் .
No comments:
Post a Comment