மழை
முடிந்த இரவு. . .
மழை நாளின் பிற்பகலில்
வெயில் படரத் துவங்குகிறது
பெரும் மழைக்குப் பின் பறவைகள்
இப்போது பறக்கத் துவங்கி விட்டன
ஒரு மழை நாளின் பிற்பகலை எவ்விதம் கடப்பது என்று
இதுவரை எந்தத் திட்டமிடலும் இருந்ததில்லை
அப்படியான திட்டமிடல்
என்னை அவனை நோக்கி நகர்த்தியிருக்கும்
மழையும்
பறவைகளற்ற தனிமையும்
என்னைத் துயரப் படுத்துகின்றன
நினைவிலிருக்கும் அந்தப் பறவையின் குரல்
என்னிடம் பகிர்ந்து கொண்டதை
புரிந்து கொண்டேனா என்பதைவிடவும்
அந்தக் குரலின் மயக்கத்தில்
இரவினைக் கடந்து விடுவேன்.
மழை நாளின் பிற்பகலில்
வெயில் படரத் துவங்குகிறது
பெரும் மழைக்குப் பின் பறவைகள்
இப்போது பறக்கத் துவங்கி விட்டன
ஒரு மழை நாளின் பிற்பகலை எவ்விதம் கடப்பது என்று
இதுவரை எந்தத் திட்டமிடலும் இருந்ததில்லை
அப்படியான திட்டமிடல்
என்னை அவனை நோக்கி நகர்த்தியிருக்கும்
மழையும்
பறவைகளற்ற தனிமையும்
என்னைத் துயரப் படுத்துகின்றன
நினைவிலிருக்கும் அந்தப் பறவையின் குரல்
என்னிடம் பகிர்ந்து கொண்டதை
புரிந்து கொண்டேனா என்பதைவிடவும்
அந்தக் குரலின் மயக்கத்தில்
இரவினைக் கடந்து விடுவேன்.
No comments:
Post a Comment