முடிவின் தொடக்கம்
இனி
செய்வதற்கு ஏதுமில்லை
அவ்வளவுதான்
என்றானபிறகுதான்
சரித்திரத்தின் அடையாளமாகிய
சாதனைகளும்
மணிமுடிகளுக்கான
அதிகாரப்போட்டிகளும்
மாத்திரமின்றி
மகத்தான
காதல்களும்கூட
நிகழ்ந்திருக்கின்றன
நடக்கும் பாதை
முடிவுறும்போது
தன்னியல்பாக விரியத்தொடங்குகின்றன
இறக்கைகள்
வானத்தை நோக்கி.
- "சொல்லினும் நல்லாள்" கவிதைத் தொகுப்பிலிருந்து.