பெண்களின் இயக்கம் எப்போதுமே ஆண்கள் சார்ந்தது
தன்னை இயக்கியாக ஒப்புக்கொடுத்து விடுகிறாள்
அடுக்களையில் நுழையும் மந்திரம் அறிந்து கொள்கிறாள்
வெளியே வரத் தெரியாது
தன்னுள்ளே ஏந்திய பிள்ளையைப்
பெற்று வளர்க்கத் தெரிந்து கொள்கிறாள்
விட்டு விலகத் தெரியாது
தன்னை அலங்கரிக்கத் தெரிந்து கொள்கிறாள்
தனக்கெனத் தெரியாது
உடுத்தி நிற்கத் தேர்ந்து கொள்கிறாள்
கலையத் தெரியாது
நிலம் சாயத் தெரியும்
எழுந்து நிற்க அவளுக்கு வாய்க்கவே வாய்க்காது
ஒரு பெண் தன்னை முழுமை செய்தல் எதுவெனில்
தனக்கென இயங்குதலும்
தான் மறந்து அசையாது நிலைப்பதுவும்
உண்மையில்
இயங்குதலின் உச்சம் நிலைத்திருத்தலே .
No comments:
Post a Comment