கண்கள் மூடிக் கிடக்கிறாள்
உடல் முழுதும் கண்கள் விழித்து
இமைகளின் விளிம்பு
நீர்க்கோர்த்து
கசியத் துவங்கி
நீண்ட நேரமாகி விட்டது
திறப்புகளை அறிந்தவரே
நீர்க்கால்களின் தடம் அறிந்து
அருந்த வல்லவர்
தனிமையில் உச்சம் அடைந்திருக்கிற இந்த சுருதி
ஒரு சிறு மௌனம்
ஒரு பெரும் காலத்தின் துவக்கம்
இவ்வாறு இருக்கையில்
குழந்தைமையை
மீட்டெடுக்கிறது அழைப்பு
இப்பொழுது
அவளின்
மூடிய இமைகளுக்குள் ஒளிர்கிறது நீலவானம்.
Courtesy : Painting -Anuraag Fulay
No comments:
Post a Comment