பசுமை மினுங்குகிற சந்தன மரக்கன்று
இன்று அதிகாலை
கண்ணில் பட்ட முதல் தாவரம்
அருகே சற்று ஆழ்ந்த கரும்சிவப்பு செஞ்சந்தனம்
இலையசைந்து தன் இருப்பைக் காட்டியது
பாதுகாப்பாக நடுவதற்கு நிலமின்றி
இரண்டு ஆண்டுகளாக
தொட்டியில் வளர்ந்து கொண்டிருக்கின்ற
இரண்டு தாவரங்களையும்
இந்த மழைக்காலத்திலேனும்
உரிய நிலத்தில் சேர்த்து விட நினைக்கிறேன்
தன் போக்கில் வளரும் தாவரங்களை
பத்திரப்படுத்த நினைத்து
மனதில் வளர்த்தபடி இருக்கிறேன் .
No comments:
Post a Comment