சங்க இலக்கியம்-உடல் மனம் மொழி :
இது என்னுடைய 17 வது நூல்.
என் முனைவர் பட்டத்திற்காக
‘சங்க இலக்கியத்தில்
ஆண் மையக் கருத்துருவாக்கம்’ எனும் தலைப்பில் மேற்கொண்ட
ஆய்வினைச் செம்மைப்படுத்தி விரித்து எழுதியுள்ளேன்.
இந்த ஆய்வு இனக்குழுத்
தோற்றம் முதல் அது தாய்வழிச் சமூகமாக நிலைபெறுவது வரையிலான வரலாற்றை சங்ககாலத்தின் பின்னணியில்
சுருக்கமாக விவரிக்கிறது.
நிலத்தின் மீதான ஆணின்
உரிமை பெண்ணின் உடல் மீதான அதிகாரமாக எவ்வாறு மாற்றம் பெற்றது,
மொழியின் துணைகொண்டு பெண்ணின் மனத்தைத் தன்னகப்படுத்துவதன்
வாயிலாக பெண்ணுடல் ஆணுக்கு உகந்ததாக எவ்விதம் வடிவமைக்கப்பட்டது என்பனவற்றை ஆராய்வதோடு
இனம்,
இனக்குழு, சிற்றரசு, பேரரசு, குடும்பம், சாதி, கடவுள் வழிபாடு, மதங்களின் தோற்றம், இலக்கண இலக்கிய உருவாக்கம்
அவற்றில் வாணிபம்,
பயணங்கள்,
போர், கல்வி, பண்பாடு, தொன்மங்கள், உளவியல் போன்ற பல்வேறு காரணிகளின் பங்கு முதலியவற்றை
விவரிக்கும் தன்மையில் இந்நூல் அமைந்துள்ளது.
இந்த நூல் உருவாக்கத்தில்
என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இதை அழகிய வடிவில்
நூலாக வெளியிடும்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நிறுவனத்திற்கும் என் நன்றி.
No comments:
Post a Comment