திடம்
அரிதான
அதனுடைய இருப்பையும்
அசாதாரணமான
ஒளியையும்
அதீதமான கடினத்தையும்
காணப் பொறாமல்
மீளவும் வந்து
முட்டி மோதிச் சிதறடிக்க
முயலுபவர்கள்
அறிவதில்லை
உள்ளுக்குள்
உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்
உள்ளம்
தீட்டவும் தீராத
திண்மை கொண்ட
வைரம் என்பதை.
**
"கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்" தொகுப்பிலிருந்து...
No comments:
Post a Comment