Saturday, 14 September 2013

நரம்பிழையில் கசியும் மௌனம் ...



கசிந்திருக்கும் மௌனத்திற்கு மேல் ஒன்றுமில்லை

எந்த ஒரு கணம்
எந்த ஒரு நிலை
எந்த ஒரு சொல் எதுவும் தெரியாது.

மழைகாலத்தில் கனன்று எரிகிற விறகடுப்பைப் பார்த்தபடி
எங்கோ மரப்பொந்தில் மெலிதாய் அசைந்து
தீர்க்கமாய் அசைவுறும் பறவையொலிக் கேட்டிருப்பது
போலொரு மோனநிலை

சொற்களின் நரம்பிழைகள் மடல்பிரிந்து
ஒத்ததிர்ந்த ரகசியச் சொல்லில்
தன்னியக்கமாகச் சுரந்து கசிவது ஆனந்தம்.

மௌனத்தை
பரிசென உணர்கையில்
நிரம்பி விடுகிறேன் .

No comments: