Saturday 1 June 2013

கல் மீன். . .




அன்றைய நாளுக்கான
சொற்களை
அவளிடமிருந்து பெற்றுக்கொண்டான்

நதிக்கரை
நாணல்
கரும்புத் தோட்டம்
தரிசு நிலம்
ஆகியவற்றோடு பேசுகையில்
அல்லது பேசுவதற்காக
அந்தச் சொற்களை செலவிட்டான்

இறுதியில்
தன்னிடத்திலிருந்த
சொற்கள் தீர்ந்து போக
அவளுக்காய் வாசலில் காத்திருக்கிறான்

முற்றத்தில்
வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கும்
அவள்

அவனுக்கான
வார்த்தைகளை
நதியில் மறைத்து வைக்கிறாள்

அதை விழுங்கிய மீன்களின்
வயிற்றில்
கல்லாய் உறைந்து கிடக்கின்றன .

No comments: