Thursday 20 September 2012

உயிர்க்கும் வார்த்தைகள் . . .




மகளைப் பற்றிய
கவலை
மரத்தின் நிழலென

பொழுது தோறும் வளர்ந்து வருகிறது

தங்களது
சந்தேகங்களை
துக்கங்களை
வலி நிறைந்த மனச் சுமைகளை
பறவைகளுக்குத் தானியங்களை
தூவுவதுபோல
ஒவ்வொரு தந்தையும்
தங்களை தொடர்பவர்களிடம்
சொல்லிச் செல்கின்றனர்

அவை
தரையிறங்கும் பறவைக் கூட்டமென
ஒன்றன்பின் ஒன்றாக
உயிர்க்கிறது

ஒருபொழுது தேய்ந்து மறைய
ஒரு பொழுது விரிகிறது

மேலும்
நிலவெளிகளில் படர்ந்து வளர்கிறது.

1 comment:

புதியவன் பக்கம் said...

இங்கே வாசிக்கக் கிடைத்த முதல் கவிதை நிறைவைத் தருகிறது.