Pages

Sunday, 25 August 2013

செடியில் பூத்திருக்கும் கண்ணன் . . .



பருத்தி வெண்மையாய்
வெடிக்கும்
அது
இளமையாய் இருக்கும் பொழுது
சுவைத்து சுவைத்து உண்பார்கள்
அதைத் தாண்டி வெண்மையாய் வெடிக்கும்

அந்தப் பருத்தி
திரௌபதிக்கு எவ்வாறு சேலையாக மாறியது

கண்ணன் எங்கு செல்வான்
அவளுக்கு ஆடைகளைச் கொடுக்க

மேகம் போல் தொங்கிய பருத்தி
எவ்வாறு நூலாக மாறியது என்பதையும்
அது எவ்வாறு ஆடையாக மாறியது என்பதையும்
மேலும்
அது எவ்வாறு திரௌபதியின் மானத்தைக்
காப்பாற்றியது என்பதையும்
கண்ணனே அறிவான்

மேலும்
கண்ணனைத் தேடிக் கொண்டிருப்பது
அவள் ஒருத்தி மட்டும் அல்ல என்பதையும்.
Courtesy : Painting -Luana Sacchetti

No comments:

Post a Comment