Pages

Tuesday 6 August 2013

பெண் :



இந்த காற்றைக் கண்டெனக்குப் பொறாமை
எத்தனை சுதந்திரமாய் வீசுகிறது
அல்லது
வீசாமல் இருக்கிறது

இந்த நிலவைக் கண்டு பொறாமை
கடலைக் கண்டு பொறாமை
நிலத்தைக் கண்டு பொறாமை
பரம்பொருளான அனைத்தின் மீதும் பொறாமை

இயற்கை
இயற்கையாய் இருக்கின்றது
வீசுகிறது
சுடுகிறது
பொழிகிறது
கொல்கிறது

நான் ௬ட இயற்கை தான்
ஒன்றும் இயலவில்லை
குளிர்கிறேன்
வெப்பமுறுகிறேன்
சொல்ல உரிமையில்லை
பெற்றெடுக்கிறேன்
கொண்டாட உரிமையில்லை

இந்த
பஞ்சபூதங்களாய் இருக்கிறேன்
எனக்கென
சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை .

No comments:

Post a Comment