Pages

Friday, 31 May 2013

நட்பு . . .


அந்தப் பயணத்தில்
என்னருகில் இருந்தாய்

பேசிக் கொண்டிருந்தோம்
சொற்களாலும்
மௌனத்தாலும்

உன்மேல் சாய்ந்து கொண்டேன்
நீ உணரா வண்ணம்

அப்பொழுது
உன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது
என் அண்மைக்காக

சொல்லிவிடத்தான் விரும்புகிறேன்
உன்மீது சாய்ந்து நாட்களாயிற்றென

என் விரைந்த உடல்
ஆடைகளில் மறைந்து கொண்டிருப்பதை
அறிய மாட்டாய்

உன்னிடம் சொல்லிவிடும் வரை
இந்தப் பயணம் நீண்டால்

சொல்லி விடுவேன் .

No comments:

Post a Comment