Pages

Thursday, 30 May 2013

அர்த்தநாரி. . .



வீடு
மீண்டும் அவளைப் பெண்ணாக மாற்றியது

தாய்மையின் வாஞ்சையுடன்
பிள்ளைகளுக்காகக் காத்திருக்கிறாள்

வியர்வையும் உப்பும்
அன்றாடத்தின் வெறுப்பும் படிந்து கிடக்கும்
தன்னைக் கழுவிக்கொள்ள குளியலறை செல்கிறாள்
உதடுகளின் சாயத்தைக் கழுவுகிறாள்
அவள் மீது படிந்திருந்த பகல்
நீரில் கரைகிறது

பால்குக்கரின் விசில் சப்தத்தில்
மூளை நரம்பொன்று அதிர்கிறது
நாளைய பணிக்கென காத்திருக்கும் குறிப்புகள்
இன்னொரு நரம்பில் ஊடுருவிப் பாய்கிறது

குளியலறையிலிருந்து
நீங்கும் அவள் வேறு ஒன்றாகத் தெரிகிறாள்.

No comments:

Post a Comment