Pages

Friday, 31 May 2013

திசை மானி …



எத்தனை வகையில் தான்
வெளிப்படுத்துவாய்
உனதன்பை

என் கவிதைகளில்
ஒளிரும்
உன் வார்த்தைகள்
என்னை ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றன

அது
உனது
அன்பைப் போலவே
இருக்கின்றது

எனக்குள்
இருக்கும் உன்னை
இந்தக் கவிதைகளைத் தவிர
யார் அறிவார்

எத்தனை திசைகள்
இருப்பினும்
இந்த காந்தம்
உன்னை நோக்கியே
இருப்பது
இழுக்கென நினைத்தாலும்

உனது
புன்னகை போதும்
நான்
மலரவும்

உன்னை
மகிழ்விக்கவும் .

No comments:

Post a Comment