Pages

Wednesday, 8 August 2012

அர்த்தநாரி




வீடு
மீண்டும் அவளைப் பெண்ணாக மாற்றியது

தாய்மையின் வாஞ்சையுடன்
பிள்ளைகளுக்காகக் காத்திருக்கிறாள்

வியர்வையும் உப்பும்
அன்றாடத்தின் வெறுப்பும் படிந்து கிடக்கும்
தன்னைக் கழுவிக்கொள்ள குளியலறை செல்கிறாள்
உதடுகளின் சாயத்தைக் கழுவுகிறாள்
அவள் மீது படிந்திருந்த பகல் நீரில் கரைகிறது

பால்குக்கரின் விசில் சப்தத்தில்
மூளை நரம்பொன்று அதிர்கிறது
நாளைய பணிக்கென காத்திருக்கும் குறிப்புகள்
இன்னொரு நரம்பில் ஊடுருவிப் பாய்கிறது

குளியலறையிலிருந்து
நீங்கும் அவள் வேறு ஒன்றாகத் தெரிகிறாள்.

No comments:

Post a Comment